ஒரே இரவில் 3, 711 பேர் கைது! தொடர்கிறது தேடுதல் வேட்டை!!
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைவரை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3ஆயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதபோதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கும், குற்றச்செயல்களை குறைப்பதற்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அண்மைக்காலமாக திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.