8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் வசமாக சிக்கினார்!

சுமார் 8 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருட்கள் கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது நீர்கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது காரில் இருந்து 04 கிலோ 865 கிராம் ஹெரோயின் மற்றும் 03 கிலோ 814 கிராம் ஹசீஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

29 வயதுடைய இளைஞர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *