இனி குத்தாட்டம் போடமாட்டேன்!

‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. தற்போது தமிழில் `காபி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இனியாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகளும் இருக்கின்றது.

அவர் அளித்துள்ள பேட்டியில், நான்கு பாடல்களுக்கு டான்ஸ் ஆடிவிட்டு, ஹீரோவை காதலிக்கும் நடிகையாகவே இருந்து விடாமல் மக்கள் மனதில் பதிவது மாதிரி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கணும்’ என்றார்.
அவரிடம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் `குக்குறு’ பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு “டைரக்டரின் விருப்பத்தின் பேரில் அந்தப் பாடலுக்கு ஒப்புக் கொண்டேன்.
நல்ல கலர்புல்லான சூழ்நிலையில் அமைந்திருக்கும் அந்த பாடல். பிருந்தா மாஸ்டர்தான் அந்த பாடலுக்கு கோரியோகிராப் பண்ணியிருந்தாங்க. அதற்குப் பிறகு, நான் எந்தக் குத்துப்பாடலுக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இனியும் அப்படிக் குத்துப் பாடல்களுக்கு ஆடக் கூடாது எனவும் முடிவெடுத்துவிட்டேன்’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *