மட்டக்களப்பு விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா (ஒல்லிக்குளம்) மண்முனை பிரதான வீதியில் சிறிய ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 44 வயதுடைய எம்.ஜெயக்குமார் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகளின் படிப்புக்காக கல்லடி, நாவற்குடாவில் வசித்து வந்த இவர், கொக்கட்டிச்சோலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *