மகன் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்தார் தாய்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
சிராட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கடந்த முறை ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (17) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார்
உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு தாய் – தந்தையரால் கொண்டு வரப்பட்டது.
மகனது பிரிவைத் தாங்க முடியாத தாயார் நேற்று (18) அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு மகளைப் பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த சோகத்தை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.