பன்றி வலையில் சிக்கிய சிறுத்தை பலி!

பன்றிக்கு  விரித்த கம்பி வலையில் சிக்குண்டு பலியான 5 அடி நீளமான சிறுத்தையின் உடல் கொட்டகலை ஸ்டோனிகிளிப் மேல்பிரிவில் மீட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார்  தெரிவித்தனர் .

ஸ்டோனிகிளிப் தோட்ட மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இன்று 16.02.2019 காலை பொலிஸார் மீட்டுள்ளனர்
குறித்த பகுதியில் நீண்ட கலமாக சிறுத்தையின் அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையில் – வனஜீவராசி அதிகாரிகளினால் வெடிவைத்து விரப்பட்டட்டிருந்த
போதும் குடியிருப்பு பகுதியில் உள்ள நாய்களை வேட்டையாடவே காடுகளிலுள்ள சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு ஊடுறுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் பன்றிக்கு விரித்த கம்பி வலையில் சிக்குண்ட நிலையில்  மீட்கப்பட்ட சிறுத்தையானது 4 அடி நீளமும் 3 அடி அகளத்தையும் கொண்டுள்ளதாகவும் சிறுத்தையின் உடலத்தை உடவலவ வனவிளங்கு காரியாலயத்தாற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .
நோட்டன்  பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *