தாய், மகள்மீது அசீட் வீச்சு தாக்குதல் ! கம்புறுபிட்டியவில் பயங்கரம்!!
கம்புறுபிட்டிய – போலஹெவத்த – ரன் கெகுலாவ பகுதியில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது அமில தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.30 மணியளவிலேயே இந்த கொடூரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 39 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், மகள் கம்புறுபிடிய – ஆதபான வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார்.
தாயிடம் இருந்து பிரிந்துவாழும், தனது தந்தை மற்றும் ஓர் நபருடன் வந்து இவ்வாறு அமில தாக்குதலை நடத்தினார் என மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.