மாகந்துர மதுஷை 2 வாரங்கள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்களை இரண்டுவார காலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்கள் கடந்த 5ஆம் திகதி டுபாயில் உள்ள சொகுசு விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டு நீதிமன்றில் முதன் முறையாக அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், டுபாயில் பொலிஸார் அவர்களை தடுத்துவைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர்.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையின் பொலிஸ் விசாரணை குழுவினரும் எதிர்வரும் நாட்களில் டுபாய்க்கு செல்லவுள்ளனர் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயரதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *