தனித்துப் போட்டியிட்டாலும் ‘தாமரை மொட்டு’ வெல்லும்! – பஸில் இறுமாப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையாமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் சிறந்த வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் என்று பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன கூட்டுச் சேராவிட்டால், எதிர்வரும் தேர்தலில் வெற்றியடைய முடியாதெனப் பரவ லாகப் பேசப்படுவதில் எந்தவொருஉண்மையும் இல்லை.

ஆனால், இவ்விருக்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியைப் படுதோல்வி அடையச் செய்ய முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *