யாழ். கைதடியிலும் வெடிபொருட்கள் மீட்பு!

யாழ். தென்மராட்சி, கைதடியில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் விநியோகத்துக்கான குழாய் அமைக்கும் பணிக்காக அந்தப் பகுதியைத் தோண்டியபோது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த ஷெல் ஒன்றும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.

இது தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அதனை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *