20 ரூபா சம்பள உயர்வை ஏற்கவே முடியாது! டிக்கோயாவில் சாலைமறியல் போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டிக்கோயா, போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று ( 07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டன், டயகம பிரதான வீதியை மறித்து, சாலைமறியல் போராட்டத்தில் குதித்த, தொழிலாளர்கள், கூட்டுஒப்பந்த முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

” 25 நாட்கள் வேலைக்கு சென்றாலும், சொற்பளவு சம்பளமே கிடைக்கின்றது. இம்முறையாவது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என நம்பினோம்.

ஆனால், திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளோம். புதிய ஒப்பந்தத்தின் ஊடாக வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்கமுடியாது. ஆயிரம் ரூபா கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.”

என்று ஒருமித்தக்குரலில் தோட்டத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *