சோமாலிய கார் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் பலி! பலர் படுகாயம்!!

சோமாலியா தலைநகர் மொகடிஷிவில் உள்ள சந்தைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கி வரும் அல் பாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர்கள் அவ்வப்போது வன்முறைத் தாக்குதல்களை நடத்தி பலரைக் கொன்று குவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷிவில் உள்ள சந்தைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத் திய கார் குண்டுத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

மொகடிஷி மால் அருகே நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர் என்றும், அப்பகுதியில் உள்ள சில கட்டடங்கள் பலத்த சேதமடைந்தனஎன்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *