மாகந்துர மதூஷ் டுபாயில் எப்படி சிக்கினார்? 50 கொலைகளுடன் தொடர்பு! அடுத்து என்ன?

தனது இரண்டாவது மனைவியின் முதலாவது குழந்தையினது முதல் பிறந்த நாளை கொண்டாட சென்ற போதே பாதுகாப்பு தரப்பின் கைகளில் சிக்கிக் கொண்டார் பிரபல பாதாள உலக முக்கிய புள்ளி மாக்கந்துர மதுஷ்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற பிரபல பாடகர் அமல் பெரேரா, அவரது புதல்வரும் பாடகருமான நதீமால் , நடிகர் ரயன் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் உட்பட்ட 25 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டப்படி இவர்களை நாடுகடத்த முடியாதென்று சொல்லப்படுகிறது. ஆனால் அரபு நாட்டின் சட்டங்கள் இவர்கள் மீது பாயலாம்.

எனினும் ஜனாதிபதி மைத்ரி இந்த விடயத்தில் கடும்போக்கில் இருப்பதால் இவர்களை இலங்கைக்கு கொண்டுவர இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கென விசேட குழுவொன்று கொழும்பில் இருந்து டுபாய் நோக்கி செல்லவுள்ளது.

அதேவேளை, 2006 ஆம் ஆண்டளவிலேயே பாதாள கோஸ்டி செயற்பாடுகளுக்கு மதுஷ் வந்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் படுகொலையை செய்துள்ளார்.

சுமார் 50 மனிதப்படுகொலைகளுடன் இவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அறிய …..

நிழல் உலக தாதா மாகந்துர மதூஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *