தவறான பாதையிலேயே செல்கிறது கூட்டமைப்பு! – விக்கி பகிரங்கக் குற்றச்சாட்டு
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான வழியில் பயணிக்கின்றது. கூட்டமைப்பு தற்போது செல்லும் பாதை நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்பதே எமது கணிப்பீடு.”
– இவ்வாறு பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.