கட்டுநாயக்க விமான நிலையத்தை மாலைத்தீவு பிரஜைகள் ஒளிப்பதிவு செய்தது ஏன்? நால்வர் கைது!
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை அனுமதியின்றி, ‘ட்ரோன் கெமரா ‘ மூலம் ஔிப்பதிவு செய்த மாலைதீவுப் பிரஜைகள்நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
19, 22 மற்றும் 23 வயதான சந்தேகநபர்களே நேற்றிரவு (02) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்ணொருவரும் உள்ளடங்குகிறார்.
கைதானவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
இவர்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள மாலைத்தீவு தூதரகத்திடமும் தகவல் கோரப்பட்டுள்ளது.