படைப்புழுவை கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து ‘வைரஸ்’!
படைப்பு ழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர் தருவிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வைரஸைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், அதனை படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப் போவதாக தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான குடம்பி விஞ்ஞானி எஸ்.எஸ்.வெலிகமகே தெரிவித்தார்.
படைப்புழு தாக்கம் காரணமாக இலங்கையில் சோளப்பயிர் செய்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.