தேர்தலைப் பிற்போட சு.கவேதான் காரணம்! – குற்றம் சாட்டுகின்றது ஐ.தே.க.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளே தேர்தலைப் பிற்போடுவதற்கான காரணமாக அமைந்துள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“தற்போதுள்ள முறைமைக்கு அமையத் தேர்தலை நடத்துமாறு நாம் ஏற்கனவே கோரினோம். , ஆனால் அதனைச் சுதந்திரக் கட்சியினர் கேட்கவில்லை.

அப்படிச் செய்திருந்தால் இன்று தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயார். நாம் தேர்தலைக் கண்டு எப்போதும் அஞ்சியதில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *