தெஹிவளையில் வயோதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
தெஹிவளை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
64 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களாலே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சடலத்தின் மீது கைவிரல் அடையாளங்களை பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளன.