கல்முனை ஜூம்மா பெரிய பள்ளிவாசலுக்கு ஹரீஸ் நிதி ஒதுக்கீடு.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின்; நிதி ஒதுக்கீட்டில் கல்முனை முஹைதீன் ஜூம்மா பெரிய பள்ளிவாசலில் அலுமாரி அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்யும்வகையில் பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினரை அழைத்து பள்ளிவாசல்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் முஹைதீன் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த பள்ளிவாசலில் குர்ஆன் மற்றும் கிதாபுகளை வைப்பதற்கு ஏதுவாக அழகிய தோற்றத்திலான அலுமாரி அமைக்கப்பட்டுள்ளது.