மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு – 3,743 பேர் பாதிப்பு!
நாளாந்தம் 500 முதல் 600 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக, சுகாதாரப் பிரிவு
தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,743 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், யாழ். மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில், வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலையைத் தொடர்ந்தே, டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.