நாடாளுமன்றத்துக்குள் எப்படி வந்தது மிளகாய்ப் பொடி?
நாடாளுமன்றத்துக்குள் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது எப்படி மிளகாய்ப் பொடி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள் தங்கள் பாதணிக்குள் மறைத்து வைத்து மிளகாய்ப் பொடியைக் கொண்டு வந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் மிளகாய்ப் பொடி கொண்டு வந்து தூவியமை, சபாநாயகரின் ஆசனத்தை சேதப்படுத்தியமை, நாற்காலியால் தாக்குதல் மேற்கொண்டமை, சபாநாயகர் உரையாற்றும் மைக்ரோபோனை உடைத்தமை மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.