சம்மாந்துறையில் விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல்
விவசாய அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்களுடனான மக்கள் கலந்துரையாடலொன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நௌஷாட், நீர்ப்பாசன பொறியியலாளர் நவாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்
சம்மாந்துறை விவசாய மக்களின் நலன் கருதி புதிய பாலங்கள் அமைத்து தரும்படி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரினால் இராஜாங்க அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மேலும், விவசாய காணிகளுக்காக பயன்படும் பாதைகள் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கோரிக்கைகள் முன்வைக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.