சுதந்திரக் கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம்! – குமார வெல்கம வலியுறுத்து

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை இன்றி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலப் பயணம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாத்தனர்.

தற்போது இருக்கின்ற தலைவர் (மைத்திரிபால சிறிசேன) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *