ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்து வரும் ஆண்டுக்கான அந்தக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, நேற்றைய கூட்டத்தின்போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.