அரசியலமைப்பு மாற்றமானதுமுஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும்

மாகாணசபைகளுக்கான  அதிகாரப்பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத  முஸ்லீம்களுக்கு 9 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒருநிலைப்பாட்டினை  ஏற்படுத்தும்.

சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை பாராளுமன்றத்தில்  வைத்துக் கொண்டு, அரசை இறுக்கிப் பிடித்து புதிய அரசியலமைப்பினை கொண்டு வர மிகவும் பக்குவமாக செயல் படுகின்றார்கள் என்று சொல்வதை விட, பல அழிவுகளையும் தாண்டி இன்று இருக்கின்ற தமிழ் மக்களின் எதிர்காலத்தை  மனதில் வைத்துக் கொண்டு  செயற்படுகின்றார்கள் என்பது மிகவும்  பொருத்தமானதாக இருக்கும்.

அதே போல் எமது சமூகமும்21 ஆசனங்களை பாராளுமன்றத்தில்  வைத்துக் கொண்டு,அரச பிடியில் இறுகி எதுவுமே செய்ய முடியாதவர்களாய்உள்ளனர் என்று சொல்வதை விட,பல அழிவுகளையும் தாண்டி இன்று இருக்கின்ற முஸ்லீம்களின் எதிர்காலத்தை மறந்து செயல்படுகிறார்களோ? என்றே விமர்சிக்கத் தோன்றுகிறது.அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக ஏனைய சகோதர தரப்புக்களினால் பலவகையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையிலும்  கூட எமது தரப்பினர்   மௌன விரதம் இருப்பது எமக்கு அச்சத்தினை அதிகரிக்கிறது.

அரசியலமைப்பில் புதிய   மாற்றங்கள்  வரும் போது, அது   சமூகத்தில் புரிந்துணர்வுள்ள நல்ல மாற்றங்களைக் கொண்டு வருதல் வேண்டும். ஆனால் 1942 ல் இருந்துகிட்டத்தட்ட19  தடவைகள் கொண்டு வரப்பட்ட  அரசியலமைப்பு   மாற்றங்களானதுநல்லதே நடக்கும் என்றஎதிர்பார்ப்பிற்கு எதிராகவே காணப்பட்டது,இவ்வாறுமேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினால்எமது  சமூகத்துக்கென இருந்தவைகள் கூட இல்லாமல்  போனது.எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலப் பகுதியில் கிழக்கில் முஸ்லீம்களுக்கெனகாணப்பட்ட பிரதேசங்களும்,எல்லைகளும், காணிகளும், அதிகாரங்களும் இன்றில்லை.1956 ம் ஆண்டு அம்பாறை எனும் ஒரு மாவட்டம் கிழக்கில் உருவானது என்பதும் இதில்  ஒரு முக்கிய அம்சமாகும்.

அரசியலமைப்பு மாற்றங்களானது எமது சமூகத்தினைப் பொறுத்த வரையில் ஒரு கடலரிப்பாகவே செயற்படுகிறது. கடலரிப்பால் நிலத்தை இழப்பதுபோல் அரசியலமைப்பு மாற்றமானதுபல பகுதிகளில், பல விடயங்களை எமது சமூகத்துக்கு பாதகமாக மாற்றிக்கொண்டே வருகிறது.இனியும் அதே போன்று தான் நடக்கவும்  போகிறதுஎன்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுமில்லை.அதிலும் 1972 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிலோனை  ஸ்ரீலங்காவாகமாற்றிய  அரசியலமைப்பு மாற்றமானது  எமது நாட்டினை ஒரு பயங்கரவாத, யுத்த நாடாக மாற வழியமைத்துக் கொடுத்தது என்றாலும் தவறில்லை.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கும் அவர்களது  ஆதரவினை பேரம்பேசும் சக்தியாக வைத்துக் கொண்டு செயற்படுவதனால், அவர்களது சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்குஏதோ ஒரு வகையில்  குரல் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.  ஆனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்பேரம்பேசப்பட்ட அரசின் பங்காளிகளாக இருப்பதனால், மேற்கொள்ளப்படுகின்ற அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாகஅரசிடம் விளக்கத்தினை கேட்கவோஅல்லது மக்களுக்கு இது தொடர்பான விளக்கத்தினை வழங்கவோ முடியாதவர்களாக மாறிவிட்டனர்.

மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்கள் அல்லஎன்பதனைப் புரிந்து கொண்டு,புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, தெளிவான விளக்கங்களை எமது மக்களுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் வழங்க வேண்டும். மக்கள் அதனுடைய நல்லதுகெட்டதுகளை   தெளிவாக விளங்கி முடிவெடுக்கும் உரிமையினை எமக்கு வாக்களிக்கும் மக்களுக்குநாங்கள் தான் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறி  கொள்வோர் கொடுக்க வேண்டும்.

அண்மையில் வழங்கப்பட்ட முஸ்லீம் ஆளுநர்கள் விடயத்தில் நமது சகோதர இனத்தவர்களும், பேரினவாதக் கட்சிகளும் அவர்களது விருப்பமின்மையினை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற மனநிலையினைவெளிப்படுத்தியதை ஊடகங்கள் ஊடாக தெரிந்து கொண்டோம் , நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கிற்கு கரையோர மாவட்டத்தையோ அல்லது நிலத் தொடர்பற்ற இந்தியாவின்  பாண்டிச்சேரியினை ஒத்த மாகாணம் அல்லது அலகினையோ உங்களுக்குத் தர யார் சம்மதிக்கப் போகிறார்கள்?எமது சமூகத்துக்கு அதனைபெற்றுத்  தரவும் யாருமில்லை, மர்ஹும் அஷ்ரபின் பின் அதனை கேட்டுப் பெறவும் எவருமில்லை.

மக்களே ஒன்றுபட்டு முன்வந்து பெற்றாலே   ஒழிய, எமக்கு   முஸ்லீம்   தேசியம் எனும் வரத்தினை  வழங்க சாமியும் தயாரில்லை,  பூசாரிக்கும் உடன்பாடில்லை.எனவேதான் மாகாணமே இல்லாத முஸ்லீம்கள்  மாகாணம் தொடர்பான அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஆதரவினை வழங்குவது தங்களது கைகளாலயே தங்களது கண்களை குத்திக் கொள்வதற்கு சமமாகும்.

தெளிவான விளக்கங்கள் கிடைக்காத வரை தொடர்ந்து முஸ்லீம்களுக்கு பாதகமாக அமைகின்ற இந்த அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு ஆதரவு வழங்குவது என்பது முடியாத காரியமாக அமையும் என்பதால் ஐக்கிய சமாதான கூட்டமைப்புஇந்த அரசியலமைப்பு மாற்றத்தினை ஏற்றுக் கொள்ளாது என்பதனைஅரசுக்கும், மக்களுக்கு தெரியப்படுத்துகின்றது.

~ ஐ.எம்.ஹாரிப்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *