ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு – புத்த சாசன அமைச்சும் பரிந்துரை!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், புத்த சாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக
சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் மேற்படி கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தசாசன அமைச்சர் காமினி 00ஜயவிக்கிரம பெரேரா, ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.