இத்தாலிக்குத் திரும்பிச் செல்லுங்கள்! – ராகுலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு சென்ற ராகுல் காந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான அமேதிக்கு நேற்று சென்றார்.

அமேதி மாவட்டத்தில் உள்ள கவுரிகாஞ்ச் நகரத்திற்கு ராகுல் காந்தி சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் ராகுல் காந்திக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி பவுண்டேஷன் அமைப்புக்கு வழங்கிய நிலத்தை திருப்பிக் கொடுங்கள் அல்லது வேலைவாய்ப்புக் கொடுங்கள் எனக் கூறி ராகுல் காந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறும்போது, “ராகுல் காந்தியால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். அவர் இத்தாலிக்கே செல்லட்டும். இங்கிருக்க அவருக்கு தகுதியில்லை. எங்களின் நிலத்தை அவர் பறித்து கொண்டார்” – என்றார்.

முன்னதாக உத்தர பிரதேசத்தில் விவசாயிகளின் நிலத்தை ராகுல் காந்தி, அறக்கட்டளை மூலம் பிடுங்கிக் கொண்டுள்ளார் என்று ஸ்மிருதி இரானியும் குற்றம் சாட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *