ஹொலிக்ரொஸ் மகா வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம்
நாடுபூரகவும் அமுல்படுத்தப்படும் போதைப் பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்திற்கமைவாக சம்மாந்துறை ஹொலிக்ரொஸ் மகா வித்தியாலயத்தில்மூன்றாம் நாள் விழிப்புணர்வு இன்றைய தினம் பிரதி அதிபர் ள. குமாரராசா தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் சவளகடை பொலீஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் போதை தடுப்பு சம்பந்தமான விளக்கத்தை மாணவர்களுக்கு விளக்கியதுடன், புகைத்தல் பாவனையாளர்களுக்கு புகைத்தலால் நுரையீரலில் ஏற்படும் விபரீதமான ஆபத்துக்களை தெளிவான செயன்முறையின் மூலம் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வின் முதல்நாள், இரண்டாம் நிகழ்வுகள் நேற்றும், நேற்று முன்தினமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.