ஐ.தே.கவுக்குள் மீண்டும் குழப்பம்! நாடாளுமன்றகுழுக் கூட்டத்தை புறக்கணித்த பின்வரிசை எம்.பிக்கள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் ஐந்துபேர், கட்சியின் நாடாளுமன்றகுழுக் கூட்டத்தை புறக்கணித்ததால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றகுழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கட்டாயம் பங்கேற்குமாறு எம்.பிக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், எவ்வித கட்சிக்கு எவ்வித அறிவிப்பும் விடுக்காமல் நேற்றைய கூட்டத்தில் மேற்படி ஐவரும் கலந்துகொள்ளவில்லை.

பின்வரிசை எம்.பிக்களால் முன்வைக்கப்பட்ட யோசனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாகவே கூட்டத்தில் புறக்கணித்தோம் என்று ஐ.தே.க. எம்.பியொருவர் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *