முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த ஜனாதிபதி, காணி விடுகைப் பத்திரங்களை மாவட்ட செயலர்களிடம் கையளித்தார்.