ரெலோவின் நிராகரிப்புக்கு நான் பதிலளிக்கமாட்டேன்! – சம்பந்தன் தயக்கம்
“புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் அறிக்கையை ரெலோ கட்சியினர் நிராகரித்துள்ளமை குறித்து கருத்துக்கூற நான் விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.”
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அடியோடு நிராகரித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியியில் இது குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன என்று இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.