ஐ.சி.சியின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு!

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.)  2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த விருதை அவர் பெற்றிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக விளங்கிய குமார் தர்மசேன, கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வுபெற்ற பின்னர், நடுவராக செயற்பட ஆரம்பித்தார்.

மிக முக்கிய போட்டிகளின்போது அவர் நடுவராக செயறபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடுவராக தெரிவாகியுள்ள குமார் தர்மசேனவுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிக்கின்றன.

சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு
* ஐசிசியின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் விராட் கோலியே தட்டிச்சென்றுள்ளார். சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக விராட் கோலி இரண்டாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரே ஆண்டில் ஐசிசியின் மூன்று உயரிய விருதுகளை பெற்ற முதல் வீரர் விராட் கோலிதான் ஆவார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *