நேற்றிரவு நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

பிலிப்பைன்ஸூக்கு 4 நாட்கள் அரச விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

நேற்றிரவு 11.50 மணியளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 கடன் திட்டங்களிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *