ரயிலுடன் மோதியது மோ.சைக்கிள்! இருவர் உடல் சிதறிப் பரிதாபப் பலி!!
ஜா – எல, டுதெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.