தூக்கில் தொங்கிய நிலையில் படைச் சிப்பாய் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடையைச் சேர்ந்த அரியரட்ண (வயது 22) என்ற சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *