வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணிகளும், யாழ்ப்பாணத்தில் 46 ஏக்கர் காணிகளும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *