லக்ஷமன் கதிர்காமர் படுகொலை: சந்தேகநபர் ஜேர்மனியில் கைது!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 வயதான நவநீதன் எனும் குறித்த நபர் தென் ஜேர்மனில் வைத்து அவருடைய வீட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
2005ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலைசெய்வதற்குத் திட்டமிட்டிருந்தார் எனவும் ஜேர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.