சிறையில் கைதிகள் மீது கொடூரம்! – வெளியாகியது தாக்குதல் ஆதாரம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமான தகல்கள் வௌியாகியுள்ளன.
சிறைக் கைதிகளின் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பால் இது சம்பந்தமான சி.சி.ரி.வி. காட்சிகள் சில இன்று வௌியிடப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வௌியிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் சிறைக்கைதிகள் முகங்கொடுத்த சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் குறித்த அமைப்பால் இன்று தகவல் வௌியிடப்பட்டுள்ளது.