தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!
தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் நேற்று சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலைப் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.