பொங்கல் தினத்தன்று ஆலயத்துக்கு வழிபட வந்த இளைஞர்கள் மீது துரத்தித் துரத்தி வாள்வெட்டு!
பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோயிலுக்கு வந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம், யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை நாச்சிமார் கோயிலடியில், இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துமேலும் தெரியவருவதாவது,
தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோயிலில் விசேட பூஜை பழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிலையில், கோயிலுக்கு அருகில் சில இளைஞர்கள் கூடி நின்ற போது, அப்பகுதிக்கு வந்த வாள்வெட்டுக் குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த தாக்குதலில், இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.