பருத்தித்துறையில் பயங்கரம்! கோஷ்டி மோதலில் இளைஞர் கோடரியால் அடித்துக்கொலை! (படங்கள் இணைப்பு)
யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 22 வயது இளைஞர் கோடரியால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கற்கோவளம் பிரதேசத்தைச் சோ்ந்த வாசுதேவன் அமல்கரன் என்ற இளைஞரே கொலைசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.