தைத் திருநாளை கொண்டாட தயாராகிறது மலையகம்
உலகமெங்கும் வாழும் இந்து மக்கள் நாளை (15) தைத் திருநாளை கொண்டாடவுள்ளனர்.
இந்நிலையில் மலையகத்திலும் தைதிருநாளினை கொண்டாடுவதற்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தைப்பொங்களினை முன்னிட்டு பூசை பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக நகர்பகுதிகளுக்கு பெருந்திரளான மக்கள் இன்று வந்திருந்தனர்.
சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
க.கிசாந்தன்