‘ஹெரோயின் வேட்டை’யில் மேலும் மூவர் சிக்கினார்கள்

அங்குலான மற்றும் மொரட்டுவப் பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அங்குலான மற்றும் மொரட்டுவப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து 9 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அங்குலான மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் விசாரணைகளின் பின்னர் மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *