பலத்த காற்றுடன் அடைமழை; கிழக்கு மக்களே அவதானம்..!
நாட்டில் கிழக்கு பகுதியில் நிலவிவரும் தாழமுக்கம் காரணமாக, இன்று பிற்பகல் 6 மணி வரை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வரையில் உள்ள கடற்கரை பிரதேசங்களில் பலத்த காற்றுடன் அடைமழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்றொழில்களில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.