சம்மாந்துறை ஆடைத் தொழிற்சாலை ஹமீடியாஸ் நிறுவனத்திடம் கையளிப்பு!!
இளைஞர் – யுவதிகளின் எதிர்கால நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டமான சம்மாந்துறை ஆடைத் தொழிற்சாலை ஆடைத்தொழிற்சாலை விரைவில் திறக்கப்படவுள்ளது.
சம்மாந்துறை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் ஆடைத் தொழிற்சாலையினை ஹமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திடம் நேற்று (12) கையளிக்கப்பட்டது.
இதன் போது இத்தொழிற்சாலையை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன், தொழிற்பயிற்சிகள் அடுத்தமாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள விடயமும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வெகுவிரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகளும் கிழக்கு மாகாண சபை மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஆடைத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள மேலும் பல நூற்றுக்கணக்கானோர் நிரந்தர வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பையும் பெறவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.