அஸாத் சாலிக்கு பொறி! 22 இல் வருகிறது நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு  எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு,  மேல் மாகாண சபையின் அரசாங்க மற்றும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத் தெரிய  வருகிறது.

இதன்பிரகாரம்,  எதிர்வரும் 22 ஆம் திகதி,  குறித்த நம்பிக்கையில்லாப்  பிரேரணையை சபையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
ஊழல் மோசடிகளுக்குக்  குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பதை மேல்மாகாண சபை அங்கத்தவா்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே, அஸாத் சாலிக்கு எதிரான நம்பிக்கயைில்லாப்  பிரேரணையை,  எதிர்வரும் மேல் மாகாண சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக, ஐ.தே.க.
அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *