மன்னாரில் சிக்கியது பெருந்தொகை கஞ்சா! – சந்தேகநபரும் கைது
மன்னார் – வங்காலைக் கடற்பரப்பில் 184.2 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்தச் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என கடற்படை அறிவித்துள்ளது.
சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.