குருநாகல் கதிரேசனை வணங்கினார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் கதிரேசன் ஆலயத்துக்கு இன்று திடீரெனச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அவர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் ஆலயத்தைச் சுற்றி நின்று பாதுகாப்பு வழங்கினர்.
ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக்கொண்ட பின்னர் அங்கு நின்ற பக்தர்களுடன் அவர் மனம் விட்டுப் பேசிவிட்டு வெளியேறினார்.