கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை ( 07) காலை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
திருமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும் என ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான ஹில்புல்லாஹ், நேற்று முன்தினம் ஜனாதிபதியால் கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.