ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் – கனரக லொறி மோதி விபத்து: 10 பேர் பலி!

புதுக்கோட்டை அருகே திருமயம் பிரிவு சாலையில் அய்யப்ப பக்தர்கள் சென்ற வேனும் கனரக லொறியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
கோயிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் திருமயம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கனரகலொறி பாதை மாறி சென்றதால் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர்  சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *